Tuesday, July 2, 2013

மூடர்கள், பகுத்தறிவாளிகள்

தெய்வங்களைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள்  மூடர்கள்,
தங்கள் தலைவரைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள் பகுத்தறிவாளிகள் !!.

கீதைப் படி அன்பு வழி நடக்க
முற்படுபவர்கள் மூடர்கள்
தங்கள் தலைவரின் சொற்படி கோவிலையும் இடிக்க
முற்படுபவர்கள் பகுத்தறிவாளிகள் !!

மந்திரங்கள்  ஓத கடவுள் சாட்சியாக திருமணம் 
செய்பவர்கள்  மூடர்கள்,
சம்பிரதாய பேச்சுடன் தங்கள் தலைவர் சாட்சியாக திருமணம் செய்பவர்கள் பகுத்தறிவாளிகள் !!

கடவுளின் பெயரால் நற்செயல்
செய்தாலும் மூடர்கள்,
தலைவரின் பெயரால் நற்செயல்
செய்தால் மட்டுமே  பகுத்தறிவாளிகள் !!

செயல் ஒன்று அர்த்தம் மட்டும் ஏனோ இரண்டு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மூடர்கள்,
'தலைவன்' நம்பிக்கை கொண்டவர்கள் பகுத்தறிவாளிகள்,
என்ற இந்த பார்வை கொண்டவர்கள் என்று மாறுவார்கள் ?? 
Related Posts Plugin for WordPress, Blogger...